சனி, 28 டிசம்பர், 2013

ஃபாரீன் டூர்

நாள் 19.01.2336 A.D.
நேரம்: 22:36
அங்கே ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது.
“ப்ரெசிடென்ட் யூ ஹாவ் டு சூஸ், வீ ஹவ் டன் வாட் யூ ஆர்டர்ட் (நீங்க கண்டிப்பா முடிவு செய்யணும், உங்கள் ஆணையை தான் நாங்க செயல் படுத்துறோம்)”

“ப்ரெசிடென்ட் சார்! நீங்க தான் முடிவு செய்யணும், எல்லாமே உங்க ஆணை தான். ப்ரொடோகால் படி உங்களால் 20 சொந்தங்களை மட்டும் தான் அழைத்து வர முடியும். இதுவும் உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிறர் 10 பேரை தான் அழைத்து வர முடியும்”
“எல்லாம் சரிதான் ஜெனெரல்! ஆனா என்னோட சொந்தங்கள் ரொம்ப அதிகம் பேர், நா என்ன பண்ணுறது, என்னோட சித்தி பையன் ஆதியை கூப்பிடனும்னு நா பாக்குறேன், என்னோட வைப் அவளோட ஒன்னு விட்ட சித்தப்பா பசங்கள கூட்டிட்டு வரணுமாம், அழுது புலம்பரா”
“சார் இது உங்க குடும்ப விஷயம்! நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல முடிவா எடுங்க சார்!”
“சரி அத நான் பாத்துக்கறேன், உங்களை ஒரு லிஸ்ட் ரெடி பண்ண சொன்னேனே ரெடி பண்ணிட்டீங்களா...”
ஜெனெரல் ஒரு மெமரி சிப்பை குடுத்தார் “இதுல இருக்கு சார் எல்லாமே”
“இதுதானே ஜெனெரல் முடிவான குடும்பங்கள்”
“ஆமாம் ப்ரெசிடென்ட், நீங்க சொன்ன மாதிரியே எல்லாவகையான அடிப்படை தேவைக்கான திறமைகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து விட்டோம்..”
“இந்த சிப்பிற்கு வேற பிரதி எதாவது இருக்கா?”
“இல்ல சார், நீங்க பார்த்து ஓகே சொன்னீங்கன்னா உளவுத்துறை அதிகாரிகள் நாளைக்கே அவர்களிடம் “டூர்” பற்றி சொல்லி விடுவார்கள்”
“சரி நான் லிஸ்ட பாத்துட்டு மதியம் சொல்றேன்”
“ஓகே சார்!”, ஒரு சல்யுட் வைத்து விட்டு ராணுவ ஜெனரல் இடத்தை விட்டு நகர்ந்தார்.

“ராம்! உள்ள வா..” இன்டர்காமில் தனது அந்தரங்க காரியதரிசியை அழைத்தார்
“இந்த சிப்ல இருக்கற லிஸ்ட அப்படியே கம்ப்யூட்டர்ல காமி”
ராம் அந்த சிப்பை கணினியில் இணைத்தான், அந்த பட்டியல் கணினித்திரையில் தெரிய ஆரம்பித்தது.
                1.       அறிவியல் நன்றாக அறிந்த
                2.       சமையல் செய்ய
                3.       வீடு சுத்தம் செய்ய
                4.       வண்டி பழுது பார்க்க
                5.       ..
                6.       ..
100.     விவசாயம் செய்ய...

பட்டியலை பார்த்தவுடன் ஜனாதிபதி முகம் மலர்ந்தது.

“ராம், அந்த விவசாய குடும்பத்து பேரை எடுத்துவிட்டு நான் குடுக்கின்ற பெயரை சேர்த்துவிடு”
“ஓகே சார்”
“ஜெனரலை என்னை 11:00 மணிக்கு சந்திக்க சொல்லிவிடு”
“ஒகே சார்”
ஜனாதிபதி தற்பொழுது மன நிறைவோடு படுக்கை அறைக்கு சென்றார். வாய் பேசுவதை நிறுத்தியவுடன் மனம் பேச ஆரம்பித்தது.
“எல்லா நாட்டினரும் அவர்கள் நாட்டிலிருந்து “டூர்”ருக்கு இந்த 100 குடும்பங்களை அழைத்து வருகிறார்கள். நான் ஒருத்தன் மட்டும் ஒரு குடும்பத்தை அழைத்து வராமல் போனால் என்ன கெடப்போகிறது” அவர் செய்த செயலுக்கு மனம் நியாயம் கற்ப்பித்து கொண்டிருந்தது.

நாள் 20.01.2336 A.D.
நேரம்: 11:00

ஜெனெரல், நீங்க குடுத்த லிஸ்ட் பார்த்தேன். என் கைல உளவுத்துறை குடுத்த லிஸ்ட்லயும் அதே குடும்பங்கள் தான் இருக்கு. ஒரு துறைய தவிர, உளவுத்துறை அறிக்கை வேறொரு குடும்பத்தை விவசாயத்துக்கு கூட்டி வர சொல்லுது. நான் ரெண்டையுமே அலசி பார்த்ததுலே என்னோட உளவுத்துறை சொன்ன குடும்பம் சரியா இருக்குற மாதிரி இருக்கு...”
ஜெனெரல் 2 நிமிடம் யோசித்து விட்டு...
“ஒகே சார், எனக்கு இதுல சம்மதம் இல்ல, ஆனா உங்க ஆணைய மீற முடியாது”
“ஒகே! உங்க உளவுத்துறைய செய்தி அனுப்பிட சொல்லுங்க”
ஜெனெரல் புறப்பட்டு சென்றார்.


26.01.2336.

இன்று தான் “டூர்” போக வேண்டிய நாள். ஜனாதிபதி முழு ராணுவ மரியாதையுடன் அந்த கப்பலில் ஏறினார். எங்கு பார்த்தாலும் நீர். நுழையும் பொழுதே பெரிய ராணுவ டாங்கிகள் இருப்பதை பார்த்தார். பிறகு ஒவ்வொரு பிரிவையும் பார்த்துக்கொண்டே சென்றனர். ஒரு பிரிவில் சிறிது நாளைக்கு தேவையான உணவு தானியங்கள், ஒரு பிரிவில் தேவையான மருந்துகள், ஒரு பிரிவில் ஆராய்ச்சி செய்ய தேவையான உபகரணங்கள், ஒரு பிரிவில் பல வருடங்கள் மின் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள், கடைசி பிரிவில் விவசாயத்துக்கு தேவையான பொருட்கள்.
உடனே ஜனாதிபதி புன்னகைத்தார்.


ஒரு வாரத்திற்கு முன்பு...
“ஹலோ ஆதி”
“சொல்லுங்க ப்ரெசிடென்ட் சார்”
“வம்பிழுக்காம விடமாட்டியே, சரி ஒரு வாரம் கழிச்சு எல்லாரும் “டூர்” போறோம், ஜனவரி 25 இங்க வந்துரு...”
“சரி”
“”டூர்” போகுற கப்பல்ல நுழையும் பொது நீ விவசாயக்குடும்பமான்னு கேப்பாங்க, ஆமான்னு சொல்லிடு”
“ஓகே, சார்”

“ப்ரெசிடென்ட் சார்... சார்”
ராணுவ உடை அணிந்த வீரன் கூப்பிட்டு கொண்டிருந்தான்.
“சார் எதாவது மிஸ்டேக்கா சார்”
“இல்ல ஜெனெரல்”
“சாரி சார், நான் லெப்டினன்ட் ஜெனரல் தான் சார்”
“இனிமே நீ தான் ஜெனெரல், ஜெனெரல் வரல்லன்னு சொல்லிட்டாரு”.
அந்த ராணுவ வீரனின் முகம் குழப்பத்திற்க்கான அறிகுறிகளை வெளியிட்டது.


ஜனாதிபதி தனது அறைக்கு சென்றார்.
“ராம், எல்லாரும் வந்தாச்சா”
“வந்தாச்சு சார், உங்களுக்கு தான் வேய்டிங்”
“இன்னும் பைவ்  மினிட்ஸ்ல இருப்பேன்”
மாநாடு தொடங்கியது, எல்லா நாட்டு ஜனாதிபதிகளும் வந்திருந்தனர். அவர்களுன் சேர்ந்து சில முக்கியமான மனிதர்களும் (அமைச்சர்கள், அவர்கள் நாட்டின் பணக்காரர்கள்) வந்திருந்தனர்.
இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் ஜனாதிபதி பேசுமாறு அழைப்பட்டார்.
“மதிப்பிற்குரிய ஜனாதிபதிகளே, நண்பர்களே, இந்த நாள் மனித சமுதாயத்தில் மிக முக்கியமான நாள், பல லட்சம் வருடங்கள் இந்த பூமியில் சகல இடையூறுகளையும் தாண்டி இன்னும் மனித குலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சகல அறிவியல்களையும் நாம் தேர்ந்தவர்களாகி விட்டோம். ஜனவரி 30, இந்த புவி அழிந்துவிடும். காற்றில் மின்காந்த சக்திகள் அதிகமாகி பூமியின் உள்ளே இருக்கும் அணுக்கதிர்கள் வெளிப்பட்டு எல்லாரும் அழிந்து விடுவார்கள். நாம் மனிதர்கள், எக்காரணம் கொண்டும் மனித இனம் அழியக்கூடாது. இதற்காக தான் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து செய்யப்பட்டது இந்த விண்கலம். புவியில் உள்ள அனைத்து எரிபொருளையும் இந்த பிரம்மாண்ட கப்பலுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம். எல்லோரையும் அழைத்து செல்ல முடியாது என்பதால் தான் கப்பலை கடலுக்குள் மறைத்து வைத்திருந்தோம். அதுவும் ஒரு வழிப்பயணம் மட்டும் தான் மேற்கொள்ள முடியும். இன்று கிளம்பி இன்னும் ஒரு மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடைத்து விடுவோம். பிறகு அங்கே மனித குலம் தழைக்கட்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களை நம் ஒவ்வொரு நாட்டிலேயிருந்து தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்கிறோம். பூமியின் அணைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டோம், அவர்கள் அழுகுரல் நாம் கேட்க வேண்டாம். என்றாவது ஒரு நாள் மீண்டும் இந்த புவிக்கு திரும்புவோம் என்ற ஏக்கத்தோடு கிளம்புகிறோம். வாழ்க மனித குலம்”.
கைதட்டல் தொடர்ந்தது, அனைவரும் ஜனாதிபதிக்கு கை குடுத்தனர்

பெரிய தீவு போன்று கடலில் இருந்து கிளம்பியது அந்த விண்கலம். 

விண்கலம் கிளம்பிய மூன்றாவது நாள் ஆதி வந்தான்.
“வா ஆதி! உள்ள வந்துட்டியா...”
“ரொம்ப சிம்பிள் னா, வந்துட்டேன்”
“சரி இனிமே உன் பேர் ஆதி இல்ல, முகுந்த், இந்தா ஐடி, பழைய ஐடிய எரிச்சுடு”
“சரி னா”
“இறங்கும்போது கண்டிப்பா கண்டுக்க மாட்டாங்க, விவசாயின்னு  கூப்பிட்ட ஒடனே போய்டாத, இனிமே நீ ஒரு க்ராஃபோலஜிஸ்ட்”
“ஓகே னா”.


ஒரு மாதம் கழிந்தது. பிப்ரவரி 28, செவ்வாய் கிரகத்தை அடைந்ததாக ஜெனரல் அறிவித்தார். முதல் அடியை ஜனாதிபதி தான் எடுத்துவைக்க வேண்டும் என எல்லா நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். ஜனாதிபதி நெகிழ்ந்து கண்களில் நீர் குளமாகியது. விண்கலம் நெருப்பை கக்கிக்கொண்டே தரை இறங்கியது. மெதுவாக ஒரு சரிவுப்பாதை இறங்கியது. உள்ளே இருந்து வாழ்த்து கோஷங்கள் கிளம்பியது. பெருமையுடன் பாரம்பரிய உடையுடன் ஜனாதிபதி இறங்கினார்.
இந்த வேற்று மண் இன்னும் சில வருடங்களில் நம் பூமி போல் பச்சை பசேல் என்று மாற வேண்டும் என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே முதல் அடி வைத்தார்.
அனைத்து ராணுவ தளவாடங்களும் இறக்கப்பட்டன, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். குழந்தைகள் ஓடிவிளையாட துவங்கினர். தற்காலிகமாக வீடு கட்டும் தளவாடங்கள், தற்காலிக சோதனை கூடங்கள் எல்லாமே உடனடியாக உருவாகிற்று.

அந்த நாளை ஒரு விழாவாக கொண்டாட ஆரம்பித்தனர். ஜனாதிபதி அந்த சரிவுப்பதையின் மீது ஏறினார். எல்லா இயந்திரங்களும், தளவாடங்களும், உபகரணங்களும் இறக்கப்பட்டன. எல்லோரும் அவர்கள் துறைக்கான இயந்திரங்களுடன் சேர்ந்து நிற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் கண்கள் அப்படியே எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே வந்தது.
ஒரு இடத்தில் அப்படியே கண்கள் நிலைகுத்தி நின்றது, உடனே அணைத்து தலைவர்களையும் பார்த்தார் ஜனாதிபதி. எல்லார் கண்களும் அங்கேதான் பார்த்துகொண்டிருந்தது.

//அங்கே வெறும் விவசாய இயந்திரங்கள் மட்டும் தனியே நின்றுகொண்டிருந்தது//

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் - 1 (Medical Biotechnology - 1)

மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் – இதில் இரண்டு வகை உண்டு. மெடிக்கல் பயொடேக்னாலஜி மற்றும் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி. மேலோட்டமாக பார்த்தல் இரண்டுக்குமே வித்தியாசம் கம்மி. இரண்டுமே ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பதற்க்காக செயல்படுகிறது. ஆனால் செயல்பாட்டளவில் இரண்டுமே வேறு. மெடிக்கல் பயொடேக்னாலஜியை எடுத்துக்கொண்டால் ஒரு வியாதி எப்படி வருகிறது? எந்தெந்த இடத்தில் அதற்கான தீர்வுகளை காணலாம் என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் மருந்து கண்டுபிடிப்பது. ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜியில் முதலில் மருந்தை தேர்வு செய்துவிட்டு பிறகு அதற்கான செயல்பாடுகளை ஆராய்வார்கள். மெடிக்கல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு செல் பயாலஜி மற்றும் மாலிகுலர் (மூலக்கூறு) பயாலஜி பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் ஃபார்மாசுடிகல் பயொடேக்னாலஜி பின்பற்றுகிறவர்களுக்கு இம்யுனாலஜி (நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய துறை) சிந்தடிக் கெமிஸ்ட்ரி நன்றாக தெரிந்திருக்கும். இதுவும் சில காலம் முன்பு வரை தான். தற்பொழுது இரண்டுமே கிட்டதட்ட ஒன்றாகி விட்டது. இணையத்தில் அள்ள அள்ள குறையாத தகவல்கள் கிடைக்கின்றன, அதிலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிவதற்கு மிக எளிய மொழிகளில் நோட்ஸ் குடுத்துக்கொண்டிருக்கிரார்கள், இதை படித்தால் கொஞ்சம் பயொடேக்னாலஜி தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்துவிடும். இது போக ரிவ்யூ ஆர்டிக்கள்களை (அந்த வரையெல்லையில் உள்ள முக்கியமான ஆராய்ச்சிக்கட்டுரைகளை அலசி, அதன் சாரங்களை தொகுத்து வழங்கும் கட்டுரை) படிக்கும் பொழுது 200-300 ஆராய்ச்சிக்கட்டுரைகளை படிக்கும் சாரம் நமக்கும் கிடைத்துவிடும். இதிலிருந்து நாம் நமது ஆராய்ச்சிகளை எப்படி வித்தியாசமாக எடுத்துச்செல்லலாம் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அது நாம் நினைத்த பலன்களை தரலாம், தாராமலும் போகலாம். பிறகு செய்த மற்றும் படித்த தகவல்களை கொண்டு ஆராய்ச்சியை வேறுதிசையில் கொண்டு செல்லவேண்டும்.

(courtesy: www.funnytimes.com)


ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று படிகள் உண்டு.

1.       முதலில் வியாதிக்கான பாத்தோலஜி தெரிந்திருக்க வேண்டும் (எப்படி ஒரு வியாதி வருகிறது, உடம்பில் எந்த இடத்தில் தாக்கி இருக்கு, இன்னும் பல).

2.       தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் (பழைய ஆராய்ச்சிக்கட்டுரைகளை நன்றாக படித்திருக்க வேண்டும்) (சாமர்த்தியமும் இந்த இடத்தில் அவசியம்).

3.       என்னன்ன பக்க விளைவுகள் வரக்கூடும்.

கண்டிப்பாக பல ஆராய்ச்சிகள் தோல்வியில் தான் முடியும். ஏனென்றால் எல்லாமே ட்ரயல் அண்ட் எரர் (சோதனை மற்றும் பிழைகள்) முறை தான். அந்த தோல்வியான ஆராய்ச்சியின் மூலமாக கிடைத்த தகவல்களை நாம் எடுத்துக்கொண்டு பிறகு விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.



சரி இப்பொழுது மாரடைப்பை எடுத்துக்கொள்வோம். மூன்று படிகளின் படி


(courtesy: www.foxnews.com)

1.       எப்படி வருகிறது? நாம் அதிகமாக மனவுளைச்சலில் இருக்கும் பொழுதோ அல்லது அதிகமான கொலஸ்ட்ரால் உணவுகளை சாப்பிடும் பொழுதோ இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிகிறது, பிறகு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது இரத்தத்தை நாளங்களிலே உறைய வைக்கிறது, உறையும் இரத்தம் இருதயத்திற்கு செல்லும் நாளங்களில் இருந்தால் இருதயத்தின்  செயல்பாடு படிப்படியாக குறைந்து நின்றுவிடும்.

2.       எங்கே மற்றும் என்ன தீர்வு? நமது குறிக்கோள் தற்பொழுது இருதயத்திற்கு செல்லும் வழியில் உள்ள அடைப்பை எடுத்துவிட்டால் மறுபடியும் இருதயம் சாதரணமாக செயல்படக்கூடும். அந்த அடைப்பு எதனால் ஆனது? புரதம். அப்படி என்றால் புரதங்களை கரைக்கும் நொதிகளை பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்யலாம்.

3.       பக்கவிளைவுகள் – இருக்கிறது, தண்ணீர் குறைவாக இருக்கும் பொழுது மழை வந்தால் பயிர்கள் எப்படி அழுக தொடங்குமோ அதேபோல சிறிது நேரமே இரத்தம் செல்லாத இடத்திலயும் உடனே அடைப்பை பொத்துக்கொண்டு இரத்தம் பாயும் பொழுது அந்த பாதிக்கப்பட்ட நாளங்ளினால் தாங்க முடியாது, இருதயத்தின் செயல்பாடு இன்னும் மோசாமாக போககூடும், செயல்படாமலே போககூட கூடும்.

இந்த ஆராய்ச்சிகள் மூலமாக இன்றைக்கு யுரோகைநேஸ் மற்றும் ஸ்ட்ரேப்டோகைநேஸ் என்ற நொதிகள் மாரடைப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. (ஸ்டன்ட்கள் மற்றும் பலூன் ப்ளாஸ்ட் போன்ற முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன).


மேலே உள்ள படத்தில் இருதயத்திலுள்ள நாளங்கள் கருப்பு நிறத்தில் தெரிகின்றது. (a) படத்தில் பார்த்தால் உறைந்த இரத்தினால் நாளம் பாதியிலே இரத்தத்தை எடுத்து செல்வதை நிறுத்தி விடுகிறது, (b) படத்தில் அந்த இடத்தில் உள்ள உறைந்த இரத்தத்தை த்ரோம்போலயிசிஸ் (நொதிகள்) மூலமாக அகற்றப்பட்டு இரத்தம் அந்த பாதித்த இடத்தை தாண்டி செல்வதை பார்க்கலாம், (c) பிறகு அந்த இடத்தில் ஸ்டன்ட் வைக்கப்படுகிறது.  (image courtesy : http://www.mims.com)

சரி இந்த ஆராய்ச்சி மூலமாக சில நொதிகள் கிடைத்திருகின்றன அவ்வளவ்வு தானே என்கிறீர்களா?
முதலில் இந்த ஆராய்ச்சிகளினால் கிடைத்த தகவல்களை பார்ப்போம்.

1.       மாரடைப்பிற்கு காரணம் கெட்ட கொலஸ்ட்ரால்
2.       சாப்பிடும் பழக்கம்
3.       பருமனானவர்களுக்குதான் மாரடைப்பு வரும் என்பது தப்பான எண்ணம் - எல்லாருக்கும் வரக்கூடும்.
4.       மன அழுத்தமோ இல்லை இரத்தக்கொதிப்போ இருந்தால் மாரடைப்பு வரக்கூடும்
5.       குறைவான வலி மற்றும் நேரம் சேமிக்கும் சிகிச்சைகள்
6.       குறைந்த செலவில் சிகிச்சை.

இது எல்லாம் ஒரு சில ஆராய்ச்சிகூடங்கள் பல வருடங்களாக ஆராய்சிகளை நடத்தி கண்டுபிடித்தவை. இன்னும் பல நடந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வியாதிகளுக்கும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த தகவல்கள் நமது முன்னோர்களுக்கும் தெரிந்திருக்க கூடும். 

தயிர் – இது மாரடைப்பை தடுப்பதற்க்கான அருமையான உணவு. தயிரிலுள்ள லக்டோபேசில்லஸ் எனப்படும் நுண்ணுயிர்கள் உணவிலுள்ள பல அசுத்தமான கெமிக்கல்களை அகற்றுவதுடன் நல்ல கொழுப்பையே தருகிறது. கெட்ட கொலஸ்ட்ரால்களை கூட அகற்றி விடுகிறது. இதனால் தான் நமது உணவில் தயிரை கடைசியாக சாப்பிடுவோம். இதுபோக நாம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம் தினமும் குறைந்தபட்சம் 3 கி.மீ. நடக்க வேண்டும். ஏன்னா சும்மா இருந்தோம்னா நல்ல கொழுப்பு கூட கெட்ட கொழுப்பா மாறிடும்கோ.